Monday, June 30, 2014

அவன் அமுது

கோடை தாகம் தீர்க்க வேண்டி
அன்னப் பறவை போல் ஒருத்தி அவன் குளம் நாடி வந்து
கால் நனைத்து, சற்றே நீர் குடித்து, 
அது லேசாய் இனிக்க, அவள் மெல்ல இறங்கி பார்க்க
அது மெல்ல மெல்ல மேலும் உள்ளிழுக்க,
நிமிடத்தில் கழுத்து வரை மூழ்கி இருக்க,
முற்றிலுமாய் மூழ்கியவளை  சுற்றிலும் பரவியது அந்த திரவியம்..

சட்டென இருள் சூழ்ந்து மூச்சு முட்டுகையில் உணர்ந்தாள்..
இது நீர் அல்ல, இவன் காதல் அமுது என!

வெளிவர வேண்டவும் இல்லை, 
இனி அது தேவையும் இல்லை.

அவன் அமுதில் அமிழ்ந்து சாவதை விட என்ன பெரிய இன்பம் இருந்து விடப் போகிறது, வெளியே இருக்கும் அந்த வெற்று பூமியில் ?




No comments:

Post a Comment