Wednesday, September 10, 2014

இரண்டற கலந்த முரண்பாடு

 உறைந்த நீர்
வெள்ளை இரவு
சில்லென்ற சித்திரை
நட்சத்திர நிலவு
பூவில் முள்
மெத்தை நிலம்
கனத்த மேகம்
கவிதை கிறுக்கல்
நீ மற்றும் நான்
இரண்டற கலந்த முரண்பாடு ஏனோ அழகானது!


நினைப்பில் நீ...நினைவே நீ

நீலவான் கூட விநாடியேனும் வெளுத்திருக்கும்
கடல் அலை கூட சற்றேனும் ஓய்ந்திருக்கக்  கூடும்
நேரம் கூட விடாமல் ஓடுவதை ஒரு கணம் மறந்திருக்கக் கூடும்
பூமி கூட சுழன்றுகொண்டே இருக்க சற்று சலித்திருக்கும்
என் மனம் மட்டும் நிறுத்தாமல் உன்னை நினைத்துக்கொண்டே இருக்கிறது

கடல், வான், பூமி, நேரம், காலம் இவை யாவும் கடந்த உன் நினைப்பை
அசாதாரணமாக ஒரு பார்வை மட்டுமே வீசி கொடுத்துவிட்டுப் போகிறாய்

உன் சாம்பல் நிறக்  கண்கள்  என்ன நினைவு  உற்பத்திச் செய்யும் தொழிற்சாலையா ?

பூவில் தேன் தேடி சுவைக்கும் வண்டு நீயடா
பாலைவனத்தில் சிக்குண்ட நீர் தேடும் பறவை நானடா


Wednesday, September 3, 2014

பேதை நிலா


வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்தோம்..
'நாம் பிரிந்து விடுவோம்' என்றாள் அந்த நிலா.
நான் தான் அவளின் ஒற்றை வானம் என்பது கூட புரியாமல்!